இன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு!: என்ன காரணம் தெரியுமா?
இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள படப்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Aug 17, 2019, 17:40 IST
| இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு படத்தொகுப்பு - ரூபன், ஒளிப்பதிவு - ஜார்ஜ் , கலை - செல்வக்குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள படப்பையில் பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஹீரோ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in