தன்னுடைய ஆசானுக்கு மரியாதை செலுத்திய சமுத்திரக்கனி !
திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள கே. பாலசந்தரின் திருவுருவ சிலைக்கு இயக்குநர் சமுத்திரக்கனி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார்.
Sep 6, 2019, 00:10 IST
| மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் தனது திறமையை பிரதிபலிக்கும் பல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார் . அவர்களில் ஓருவர் தான் இயக்குனர் சமுத்திரக்கனி.
ஆசிரியர் தினமான இன்று ஆசானை மறவாத மாணவனாக , கே. பாலசந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவ சிலைக்கு இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் கே.பாலசந்தரின் உதவியாளராக பணிபுரிந்த மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார்.
newstm.im
newstm.in