1. Home
  2. தமிழ்நாடு

You Tube - பார்த்து கேரட் பீர் தயாரித்த நபர் கைது !!

You Tube - பார்த்து கேரட் பீர் தயாரித்த நபர் கைது !!


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபானங்களை வாங்கி குடித்து வருகின்றனர்.

வீட்டில் மதுபானம் தயாரித்த சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் , திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் தயாரிப்பது போன்ற வாசனை வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

You Tube - பார்த்து கேரட் பீர் தயாரித்த நபர் கைது !!

அவரது உத்தரவின்பேரில் , திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் கேரட் மூலம் பீர் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, சுகுமார் (25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 லிட்டர் கேரட் பீரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் , You Tube வீடியோ பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் கடந்த வாரம் குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி தன் மகன்களுக்கு குடுத்த தாயார் உள்ளிட்ட மகன்களை போலிசார் தேடி வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like