"என்னை கல்யாணம் பண்ணனுமா"... பிரபல நடிகையின் கண்டிஷன்ஸ்!
தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், இப்போது இந்திய அளவில் மிகப்பிரபலமான ஹீரோயினாக வளர்ச்சி அடைந்துள்ளார்.
தீரன் அதிராகம் 1 படம் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், என்.ஜி.கே படத்தை தொடர்ந்து இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருமணம் காதல் மீது தனக்கு நம்பிக்கை உண்டு என்று கூறியுள்ள இவர், ஒருவரை நாம் காதலிக்கும்போது முழுமனதுடன் காதலிக்க வேண்டும், நான் அப்படிப்பட்ட பொண்ணுதான் என்று கூறியுள்ளார்.
ஓர் ஆணிடம் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர் உயரமாக இருக்கவேண்டும். நான் ஹீல்ஸ் போட்டாலும் அவரை அண்ணாந்து தான் பாக்கணும். புத்திசாலித்தனத்துடன் வாழ்க்கையில் ஒரு லட்சியத்துடன் எனது கணவர் இருக்க வேண்டும்” என்று கண்டிஷன்ஸ் போட்டுள்ளார்.
newstm.in