“தலித் மக்களின் மீதான வன்முறையை ஒப்புக் கொள்வீரா?” – பா.ரஞ்சித்!

தலித் மக்களின் மீதான வன்முறை சம்பவங்களைப் பற்றிய விவாதத்தில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதில், மத்திய பாஜக அரசு, அதிமுக பொதுச்செயலாளர், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் வீடியோவை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார், அதில் “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்முறை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது… https://t.co/t4Bruzfhal
— pa.ranjith (@beemji) February 15, 2025
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது… https://t.co/t4Bruzfhal
— pa.ranjith (@beemji) February 15, 2025