அப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமாட்டேன் : உ.பி. முதல்வர் உறுதி!
தனது தந்தை ஆனந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 15ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நோய் பாதிப்பு அதிகமானதன் காரணமாக இன்று (20.04.20) காலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
newstm.in