1. Home
  2. தமிழ்நாடு

எங்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை.? - மருமகன் ஆத்திரத்தால் மாமனாருக்கு ஏற்பட்ட சோகம்..!

எங்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை.? - மருமகன் ஆத்திரத்தால் மாமனாருக்கு ஏற்பட்ட சோகம்..!


திருச்செங்கோடு அருகே முதல் மனைவி மகளுக்கு மட்டும் உதவுகிறார் என மாமனாரை குத்திக்கொலை செய்த மருமகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு இரண்டு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பெண்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

இதில் இரண்டாவது மனைவியின் இளைய மகளினுடைய கணவர் நல்லமுத்துவுக்கும் (42), மாமனார் ராஜாமணிக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், மூத்த மகள் குடும்பத்திற்கு மட்டுமே அனைத்து பண உதவிகளை வழங்குவதாகவும், தனது குடும்பத்திற்கு எதுவும் வழங்கவில்லை எனவும் ராஜாமணியுடன் நல்லமுத்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கம்போல் ஏற்பட்ட தகராறின் முடிவில் ஆத்திரமடைந்த நல்லமுத்து மாமனார் ராஜாமணியை வீட்டில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாமணி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைத்தொடர்ந்து மாமனாரை கொலை செய்துவிட்டதாக நல்லமுத்து வெப்படை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like