1. Home
  2. தமிழ்நாடு

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியாதது யார் தவறு? - கமல் கோபம்

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியாதது யார் தவறு? - கமல் கோபம்


குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை என்று உடுமலை சங்கர் ஆணவ கொலை தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன், ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு? என கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in 

Trending News

Latest News

You May Like