இன்று முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும்…எதெல்லாம் இயங்காது..?

இன்று முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும்…எதெல்லாம் இயங்காது..?

இன்று முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும்…எதெல்லாம் இயங்காது..?
X

தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கில் எதெல்லாம் இயங்கும் ,இயங்காது என பின்வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.

  • முழு நேர ஊரடங்கின்போது பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி உண்டு. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • முழு ஊரடங்கில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி.
  • இரவு ஊரடங்கின் போது மற்றும் முழு ஊரடங்கின்போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக செல்லும் மக்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
  • முழுநேர ஊரடங்கின்போது உற்பத்தி சாலைகள், ஐடி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரத்தில் அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டையுடன் வெளியே வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
  • திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருமண அழைப்பிதழை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் தடை ..?

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை
  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்
  • மீன் மற்றும் இறைச்சி கூடங்கள் விற்க அனுமதி தடை .
  • பொது போக்குவரத்திற்கு தடை .
Next Story
Share it