1. Home
  2. தமிழ்நாடு

என்ன தான் ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு..? கிருஷ்ணகிரி நிர்வாகிகள் கூண்டோடு விலகினர்..!


என்ன தான் ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு என்பது போல் தான் கடந்த சில மாதங்களாக கட்சி தாவல்கள், விலகல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. நீண்ட நாட்களாக அண்ணன் சீமான் உடன் பயணித்த நாம் தமிழர் தம்பிகள் அடுத்தடுத்து கொத்துக் கொத்தாக விலகி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் திமுகவிலும் அதிமுகவிலும் இணைந்தனர். இதை அடுத்து தற்போதும் ஏராளமான இளைஞர்கள் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

சீமானின் செயல்பாடுகள் காரணமாகவே நிறைய இளைஞர்கள் நிர்வாகிகள் தற்போது வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். அந்த வகையில் சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர்.

மேலும், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன், இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகினர்.

Trending News

Latest News

You May Like