1. Home
  2. தமிழ்நாடு

இணையத்தில் டிரெண்டாகும் #அஜித்தைபின்தொடரும்விஜய் !! டாக்...எதுக்காக ?

இணையத்தில் டிரெண்டாகும் #அஜித்தைபின்தொடரும்விஜய் !! டாக்...எதுக்காக ?


கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கும், 6 மாநிலங்களுக்கும் நடிகர் விஜய் நிதியளித்தது குறித்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இதற்கு போட்டியாக #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் அஜித் ரசிகர்களால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. முதலில் நடிகர் அஜித் தான் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்தார். தற்போது விஜய் அளித்துள்ளார். இதனால் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் என்ன தான் இது போன்ற காரியங்கள் செய்தாலும் , அஜித் , விஜய் இதை விரும்புவதில்லை. அவர்களும் பல முறை சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இரு தரப்பு ரசிகர்களும் அவ்வப்போது பிரச்சனையில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது.

Newstm.in

Trending News

Latest News

You May Like