இன்று சீமான் அரசியல் செய்யவே பெரியார்தான் தேவைப்படுகிறார் – பார்த்திபன்!

சீமான் தொடர்ந்து தந்தை பெரியார்குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபனிடம், பெரியார்குறித்து சீமான் சர்ச்சையாகப் பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், “பெரியாரைக் கொஞ்சம் சிறியோர் ஆக்குவதற்கு சீமானுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கலாம்.
இந்த விவகாரத்தைப் பற்றி நாம் பேசாமல் விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
பெரியார் எவ்வளவு பெரிய பெரியாராக இருந்தால் இன்றைய அரசியலுக்கும் அவர் தான் தேவைப்படுகிறார்.
சீமான் இன்று அரசியல் செய்வதற்கே தந்தை பெரியார்தான் தேவைப்படுகிறார்” என்று தெரிவித்தார்.