உண்மை இது தான்..! அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு..?
மாணவி பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்ததாக பரவும் தகவல்கள் குறித்து போலீஸ் டிஜிபி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து உள்ளார். அப்போது மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரனுக்கும், திருப்பூரை சேர்ந்த ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,"சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அ பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இை தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு. இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் முன்னேறுங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக, "எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்", சிறப்புப் புலனாய்வுக் குழுவானது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரிலிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்" "திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவங்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன். இல்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.
மாணவி பாலியல் வழக்கு: திருப்பூரை சேர்ந்தவருக்கு தொடர்பு? போலீஸ் டிஜிபி விளக்கம்
Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 4 Jan 2025, 8:04 pm
Subscribe
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக பரவும் தகவல் குறித்து போலீஸ் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil×NYC Hotel Smartphone Booking | Bookmark Now! | New York City Hotel Booking |Mill Canyon Road|
Click Here
anna university caseஅண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து காதலனுடன் இருந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் போர் கொடியை தூக்கி உள்ளன. இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாணவி பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்ததாக பரவும் தகவல்கள் குறித்து போலீஸ் டிஜிபி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து உள்ளார். அப்போது மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரனுக்கும், திருப்பூரை சேர்ந்த ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
You May Like
Learn More
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,"சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அ பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இை தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு. இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் முன்னேறுங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக, "எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்", சிறப்புப் புலனாய்வுக் குழுவானது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரிலிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்" "திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவங்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன். இல்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.
இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள் தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துதுடன். புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்" என கூறப்பட்டு உள்ளது.