1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் இந்த மூன்று வகையான வங்கி கணக்குகள் மூடப்படும்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..!

1

நம் அனைவருக்குமே வங்கிக் கணக்கு என்பது மிகவும் முக்கியம். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருக்கிறார்கள். அவரரவரின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வங்கிகளில் கணக்கு தொடங்குகிறார்கள்.

மூன்று வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் மூடப்பட்ட கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளை மூடினால் மோசடி வழக்குகள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கிக் கணக்கு டார்மெண்ட் கணக்கு என்று அழைக்கப்படுகிறது. அந்த மாதிரியான கணக்குகள்தான் மூடப்படுகின்றன.

வங்கி வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும், வங்கி நிர்வாகத்தை மேம்படுத்தவும் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் உங்கள் கணக்கும் சேர்க்கப்பட்டிருந்தால் விரைவில் ஒரு அப்டேட்டை முடிக்க வேண்டும். KYC செயல்முறையை முடிப்பது மற்றும் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பரிவர்த்தனை செய்தால் உங்களுடைய கணக்கு மூடப்படாது. அதேபோல, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும்.

இந்தியாவின் வங்கி அமைப்பில் பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது. வங்கிக் கணக்குகள் தொடர்பான புதிய விதிகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளன. இது லட்சக்கணக்கான கணக்கு வைத்திருப்பவர்களை பாதிக்கும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, 3 சிறப்பு வகை கணக்குகள் மூடப்படுகிறது.

மோசடி வழக்குகளை தடுக்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது வங்கித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய விதிகளை அமல்படுத்துவதன் மூலம் மோசடி அபாயமும் குறையும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. அதோடு டிஜிட்டல் மயமாக்கல் ஊக்குவிக்கப்படும்.

தற்போதைய உத்தரவின்படி, நீண்ட காலமாக ஜீரோ பேலன்ஸ் இருக்கும் வங்கிக் கணக்கிகள் மூடப்படவில்லை. பெரும்பாலான மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் எடுத்துவிடுகின்றனர். அதன் பின்னர் எந்த பரிவர்த்தனையையும் செய்வதில்லை. பல காலமாக ஜீரோ பேலன்ஸ் இருக்கும். இந்த மாதிரியான கணக்குகள் இனி மூடப்படும்.

Trending News

Latest News

You May Like