3 நாட்களுக்கு மழை இருக்குமாம் !! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா ?
வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் இருக்கும் சில மாவட்டத்தில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டத்தில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம்.
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வறண்ட அணிலை நிலவினாலும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்ஸியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்ஸியஸ் பதிவாகும் என்று தெரிவித்தனர். மேலும், 28 ஆம் தேதிவரை தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
Newstm.in