யுவன் ஷங்கர் ராஜாவின் தற்கொலை முயற்சி... திடுக்கிட வைக்கும் தகவல்!
இசைஞானியின் மகனான யுவன் ஷங்கர் ராஜா மிகவும் திறமையானவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக அதிகமாக திரைப்படங்களுக்கு இசை அமைப்பது இல்லை என்றாலும், 2000 முதல் 2010 வரை அவர் ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தார் என்று சொல்லாம். இப்போதும் அவரது இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. வெங்கட் பிரபுவின் படங்களுக்கு மட்டும் இசை அமைத்தார். அப்போது மிகவும் மன வேதனைக்குள்ளான யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்கொலை செய்ய கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியதாம். மன அழுத்தம் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். பின்னர் உடனடியாக இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் அவரது வாழ்க்கையில் அமைதி நிலவியதாம். இதனை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
newstm.in