1. Home
  2. தமிழ்நாடு

சி.பி.எஸ்.சி , நீட் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் ஆகஸ்ட் 15 க்குள் அறிவிக்கப்படும் !! ரமேஷ் பொக்ரியால்

சி.பி.எஸ்.சி , நீட் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் ஆகஸ்ட் 15 க்குள் அறிவிக்கப்படும் !! ரமேஷ் பொக்ரியால்


நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு இருந்ததால், மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள் , கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.சி , நீட் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் ஆகஸ்ட் 15 க்குள் அறிவிக்கப்படும் !! ரமேஷ் பொக்ரியால்

தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில் மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த ஊரடங்கு தற்போது 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் , கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் மாதம் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அனைத்து வித தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இது குறித்து ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறுகையில் ;

ஆகஸ்ட் 15 க்குள் இந்த அமர்வில் பரீட்சைகளின் அனைத்து முடிவுகளையும் அறிவிக்க முயற்சிக்கிறோம். CBSE போர்டு தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறும், ICSE/ISC  தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 12 வரை தொடங்கும். NEET மற்றும் JEE ஆகியவையும் ஜூலை மாதத்தில் நடைபெறுகின்றன,

நீட் ஜூலை 26 ம் தேதியும், JEE ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை நடைபெறும். பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது பாதுகாப்பிற்காக UGC, NCERT வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். கோவிட் -19 சூழ்நிலைகளில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் பணியைத் தொடங்க பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் அவசியம்.

அறிக்கையின்படி, ஆசிரியர்கள் முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும், பள்ளிகளில் வெப்ப ஸ்கேனர்கள் நிறுவப்படும், இரண்டு மாணவர்கள் மட்டுமே மூன்று இருக்கைகளில் அமர்வார்கள்,

மேலும், தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

Newstm.in

Trending News

Latest News

You May Like