1. Home
  2. தமிழ்நாடு

காதலியையும், வீட்டில் பார்த்த பெண்ணையும் ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!

காதலியையும், வீட்டில் பார்த்த பெண்ணையும் ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!


பெற்றோர் பார்த்துவைத்த பெண் மற்றும் காதலி என இருவரையும் இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலம் கெரியா என்ற பகுதியில் வசித்துவரும் சந்தீப் என்ற இளைஞர் போபாலில் படித்தபோது ஹோஷங்காபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், அவர்களது திருமணத்திற்கு சந்தீப்பின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், தாங்கள் பார்த்துவைத்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். 


இந்த பிரச்னை, கெரியா கிராம பஞ்சாயத்துவரை சென்றதை அடுத்து, பஞ்சாயத்து தலைவர்கள் மூன்று குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சந்தீப்பை இரண்டு பெண்களுக்குமே திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். இதனையடுத்து அனைவர் சம்மதத்துடனும் கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

newstm.in

Trending News

Latest News

You May Like