புதிய உச்சமாக தமிழகத்தில் ஒரே நாளில் இன்று 4,526 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை பொறுத்த வரை பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஸ்சார்ஜ் எண்ணிக்கையிலும் இதுவரை இல்லாத அளவாக 4743 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்து இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 4343 பேர் பாதிக்கப்பட்டதே அதிகமாக இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது...
newstm.in