1. Home
  2. தமிழ்நாடு

துப்பாக்கி முனையில் 5 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி!



காதலனுடன் பைக்கில் சென்ற சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் 17 வயது சிறுமி ஒருவர் ப்ளஸ் 1 படித்து வருகிறார். இவர் நடனமும் பயின்று வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடன வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் காலியதிஹா என்ற இடத்தில் இருந்து சிறுமியை மீட்டனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் நடன வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ஐந்து பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். ஆனால் அச்சிறுமி பொய் சொல்வதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

துப்பாக்கி முனையில் 5 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி!

தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போது அச்சிறுமி உண்மையை பேசத் தொடங்கினார். நடன வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு அச்சிறுமி தனது காதலனுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காதலனை கட்டிப்போட்டுவிட்டு அவர் கண்முன்னே சிறுமியை ஐந்து பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம். இதனையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like