1. Home
  2. தமிழ்நாடு

தப்பி செல்ல முடியாமல் உணவு கிடைக்காமல் தவிப்பு.. கொலை குற்றவாளிகள் எடுத்த முடிவு..!

தப்பி செல்ல முடியாமல் உணவு கிடைக்காமல் தவிப்பு.. கொலை குற்றவாளிகள் எடுத்த முடிவு..!


உணவுக்கும் வழியில்லை, தப்பிக்கவும் வழியில்லை என்பதால் கொலைக்குற்றவாளிகள் 4 பேர் வேலூரில் போலீஸில் சரண் அடைந்துள்ளனர்.

வேலூர் கொசப்பேட்டை பகுதி எஸ்.எஸ்.கே.மானியம் தெருவை சேர்ந்தவர் உதயக்குமார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், உதயக்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணை 3வதாக திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் சகோதரர் இம்மானுவேல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் உதயகுமாரை அவரது வீட்டின் முன்புவைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

மேலும் அக்கும்பல் தப்பியோடும் போது ஒரு பெண்ணிடம் 10 சவரன் செயினை வழிப்பறி செய்துவிட்டு சென்றது. கொலை, வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

தப்பி செல்ல முடியாமல் உணவு கிடைக்காமல் தவிப்பு.. கொலை குற்றவாளிகள் எடுத்த முடிவு..!

இந்நிலையில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் இம்மானுவேல், நவின்குமார், நிர்மல், அந்திரியாஸ் ஆகிய 4 பேரும் இன்று வேலூர் தெற்கு காவல் துறையினரிடம் சரணடைந்தனர். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களால் வேலூரை வீட்டு வெளியே செல்லமுடியவில்லை. வழிபறி செய்த 10 சவரன் தங்க சங்கலியையும் விற்க முடியவில்லை. மேலும் சாப்பிடுவதற்கு உணவகங்கள், கடைகள் எதுவும் இல்லாததால் உணவின்றி தவித்துள்ளனர்.

இதனால் சரணடைய நீதிமன்றமும் இல்லாததால் காவல் நிலையத்தில் சரணடைவது என முடிவு செய்து, வேலூர் அடுத்த சித்தேரியில் சுற்றி திரிந்துள்ளனர். பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடு காவலர்களை வரவழைத்து சரணடைந்துள்ளனர்.

 இதையடுத்து இவர்களை கைது செய்த காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

குடியாத்தம் கிளைச்சிறையில் அடைக்கும் முன்பு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  

newstm.in 

 

Trending News

Latest News

You May Like