விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் புதிய தகவல் !
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பீகார், உத்தரப் பிரதேசம், கேரளா, அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவும் சூழ்நிலையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வரை திட்டமிட்டிருந்தபடி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, விரைவில் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என செய்தித் தொடர்பாளர் ஷேபள்ளி சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், இடைத்தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Decision to hold bye-elections in Assembly and Parliamentary Constituencies was taken by the Commission after a review today. The schedule etc. shall be announced at an appropriate time.
— Sheyphali Sharan (@SpokespersonECI) July 24, 2020