1. Home
  2. தமிழ்நாடு

ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது !

ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது !


சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் உத்தண்டி அருகே பங்களா வீட்டில் 9ஆம் வகுப்பு சிறுமி மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.  

தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வந்த அவர், கொரோனா ஊரடங்கால் பயிற்சி பெற முடியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பயிற்சியாளரை மூலம்  தொடர்ந்து கொடுக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதை அடுத்து திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 42 வயதான மகேஷ் என்பவரை தனது மகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சி அளிக்க அமர்த்தினர்.
 
உத்தண்டி அருகே உள்ள சிறுமி வீட்டிற்கு தினமும் சென்று மகேஷ் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி சிறுமிக்கு ரிலாக்சேஷன் உடற்பயிற்சியை மகேஷ் அளித்துள்ளார்.

ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது !

அப்போது, சற்று உறக்க நிலைக்கு சிறுமி சென்றதை அடுத்து, அவருக்கு மகேஷ் பாலியல் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியுள்ளார். திடுக்கிட்டு எழுந்த சிறுமி, பயிற்சியாளர் மகேஷின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தியுள்ளார். 

சிறுமியின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் பணியாளர்கள் பயிற்சி நடைபெற்ற இடத்திற்கு ஓடினர். அவர்களை பார்த்ததும் மகேஷ் அங்கிருந்து வெளியேறி, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார்.
 ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது !
இதனால் பயிற்சியாளர் மகேஷை கைது செய்து, இது போல் எத்தனை சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தந்தையான தொழிலதிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  

தொழிலதிபரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மகேஷை நேற்று கைது செய்தனர். அவர் மீது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like