லேஸ், குர்குரே போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை!
தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக பயன்படுத்தும் ஒரு முறை பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசுதடை விதித்துள்ளது. மேலும்ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் பாக்கெட் போன்ற அத்யாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர், குளிர்பானம் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
newstm.in