மருத்துவ ஆலையில் திடீர் வாயு கசிவு... 2 பேர் கவலைக்கிடம்!
அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டி மருத்துவ ஆலையில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாராவாட மண்டல் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டியில் உள்ள தனியார் மருத்துவ ஆலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட வாயு கசிவினால் 4 பேர் பாதிக்கப்பட்டனர். உடனடியா 4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விஜயவாடாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய் கிருஷ்ணன் கூறுகையில், “காயமடைந்த நான்கு பேரும் தனியார் ஆலையில் மருத்து உற்பத்தியின் போது கசிந்த ஹைட்ரோஜன் சல்ஃபைட் எனும் வாயுவை சுவாசித்ததாகவும், இதனால் மயக்கமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக” தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் விபத்தா? அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் சதி செயல் உள்ளதா? என அம்மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.