1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி தரும் தகவல்: கொரோனாவின் 2-ஆவது அலை மிக கடுமையாக இருக்குமாம்..!



உலகம் முழுவதும் தொடர்ந்து பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒரு நிலையில் அனைவருக்கும் மீண்டும் ஓர் அதிர்ச்சி தரும் விஷயமாக கொரோனாவின் இரண்டாவது அலை ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தாக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சாரியா குறிப்பிடும் போது, ஒவ்வொரு நாளும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் இனி வரக்கூடிய காலகட்டத்தில் மெல்ல மெல்லச் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே வேகத்தில் மீண்டும் கொரோனவின் இரண்டாவது அலை மழைக்காலத்தில் வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார்.  

மேலும், நாம் எந்த அளவுக்கு சமூக விலைகளை கடைபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என குறிப்பிட்ட அவர், இந்த தருணத்தில் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கக் கூடிய சில நிகழ்வுகளையும் நாம் உற்றுக் கவனிக்க வேண்டும் என்றார்.

அதிர்ச்சி தரும் தகவல்: கொரோனாவின் 2-ஆவது அலை மிக கடுமையாக இருக்குமாம்..!

இரண்டாவது முறையாக நோய்த் தொற்று ஏற்பட்டால் அந்நபர் போதுமான எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம் என்றும் கூறினார். 

இதற்கான உரிய தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் வரையில் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அப்போது எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த குறிப்பிட்ட பகுதியில் சமூக விலகல் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அவரது பேச்சில் முக்கியமான தகவலாக இதனை குறிப்பிட்டார். அதாவது மழைக்காலத்தில் பொதுவாகவே சளி, காய்ச்சல் இருமல் வருவது சாதாரணமாக பார்க்கப்படும். இதுபோன்ற தருணத்தில் பருவநிலை மாற்றம் என நமக்கு நாமே சொல்லிக் கொண்டு சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

அதிர்ச்சி தரும் தகவல்: கொரோனாவின் 2-ஆவது அலை மிக கடுமையாக இருக்குமாம்..!

அது கொரோனாவாக கூட இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகி, சோதனை செய்து, அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார். எனவே அந்த கட்டம் மிக முக்கியம் என்றும் அப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
newstm.in 

Trending News

Latest News

You May Like