1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிக்கு சென்ற மகன்.. பலாத்காரம் செய்த மாமனார்.. போலீசில் மருமகள் புகார்..!

பள்ளிக்கு சென்ற மகன்.. பலாத்காரம் செய்த மாமனார்.. போலீசில் மருமகள் புகார்..!


ராஜஸ்தானை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இந்நிலையில், குணா மாவட்டத்தில் உள்ள மியானா போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில் இளம்பெண் கூறியிருப்பதாவது;

“எனது கணவர் பள்ளிக்குச் சென்ற பின்னர் எனது மாமனார் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இப்போது, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் எனது மாமனார் பல சட்டவிரோத ஆயுதங்களை வைத்துள்ளார்.

அந்த ஆயுதங்களை காட்டி குடும்ப உறுப்பினர்களை அவர் அச்சுறுத்துகிறார். மேலும், குடும்பத்தில் உள்ள பல பெண்களை எனது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்” என, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Trending News

Latest News

You May Like