ஒரு பொண்னுக்கு இத்தனை காதலன்களா !! விசாரணையில் கலங்கிய போலீசார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது.நேற்று ஒரு நாள் மட்டும் 90,722 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 824 பேர் உயிரிழந்துவிட்டனர். 5,804 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு காதலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர்கள் இருவர் மற்றும் அவரின் குடும்பத்தினர்களை போலீசார் தடுமைப்படுத்தினர். விசாரணையில் அந்த வாலிபரின் காதலிக்கு மேலும் 3 காதலன்கள் இருப்பது தெரியவந்தது.
எனவே அந்த 3 பேரையும் போலீசார் தனிமைப்படுத்தினர். விசாரணையில் அந்த 3 பேரில் ஒருவனுக்கு 2 காதலிகள் இருப்பது தெரியவந்தது. எனவே, அந்த 2 பெண்களையும் போலீசார் தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்பின், அந்த 2 பெண்களில் ஒருவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவர போலீசார் தற்போது தலையை பிய்த்து வருகிறார்களாம். கேட்கும் நமக்கு தலை சுற்றுகிறது எனில் போலீசாரின் நிலைமயை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இணைய தளவாசிகள் சோசியல் ஆப் - ல் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
Newstm.in