1. Home
  2. தமிழ்நாடு

9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்

9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;  தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 7 செமீ, ராமநாதபுரத்தில் 4 செமீ, தொண்டி யில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர்,திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டி பதிவாக வாய்ப்புள்ளது.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்அளவை விட அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி பதிவாகி உள்ளது என கூறினர்.

பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் , பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like