1. Home
  2. தமிழ்நாடு

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்..

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்..


தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்..

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸும் , குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும்.

கர்நாடகா , கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையில் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் குஜராத் கடற்பகுதிகளில் கடல் அலைகள் 4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Newstm.in

Trending News

Latest News

You May Like