அதிர்ச்சி சம்பவம்... கொரோனா நிவாரணமாக ரூ.1 வழங்கிய வழக்கறிஞர்கள்!
கொரோனா நிவாரண நிதியாக சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாய் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிதி திரட்டி வருகிறது. இந்நிலையில் அதற்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். மற்றொரு வழக்கறிஞர் 10 ரூபாய் வழங்கியுள்ளார். அவர்களின் உதவும் மனப்பான்மையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், வழக்கறிஞர்களின் இச்செயல் நிவாரணம் நிதி திரட்டுவதை கேலி செய்யும் வகையில் உள்ளதாக பார் கவுன்சில் உறுப்பினர் பால் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
newstm.in