அதிர்ச்சி தகவல்... இந்தியாவில் கொரோனா எப்போது உச்சம் தொடும் தெரியுமா?
இந்தியாவில் கொரோனா உச்சம் தொடுவது எப்போது என்பது குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு என்பது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் எல்லோரும் அச்சத்தில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் எப்போது உச்சம் தொடும் என்பது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. அதில், நவம்பர் மாதம் மத்தியில்தான் உச்சம் தொடும் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஊரடங்கு காரணமாக பல்வேறு பயன்கள் கிடைத்துள்ளதாகவும், உயிரிழப்பு 60 சதவீதம் வரை தடுக்கப்பட்டது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் என்றும், ஆனால் தற்போது அவை 83 சதவீத அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
newstm.in