1. Home
  2. விளையாட்டு

அதிர்ச்சி! இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா! முழு மருத்துவ குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

அதிர்ச்சி! இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா! முழு மருத்துவ குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

இங்கிலாந்து ஓவல் மைதனாத்தில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகிறது. 4வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..


ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் என வந்தவர்கள் மட்டுமே இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

Trending News

Latest News

You May Like