மனசு தான் அழகு என்று நிரூபித்த சீரியல் நடிகை... அவரோட மாப்பிள்ளைய பாருங்க புரியும்!
செய்தி வாசிப்பாளர், ரிப்போர்டர், நடிகை என்ற பலமுகங்களை கொண்ட சரண்யா தற்போது ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.
நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இருவரது வீட்டிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் சரண்யா, மாநிறத்தில் உள்ள தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அதைப் போலவே தற்போது செய்துகாட்டிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
newstm.in