1. Home
  2. விளையாட்டு

ஒலிம்பிக்கில் போட்டிக்கு சானியா மிர்சா தேர்வு!

ஒலிம்பிக்கில் போட்டிக்கு சானியா மிர்சா தேர்வு!

2020 ல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த வருடம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெற உள்ளது.இதற்கான வீரர்களின் பட்டியலை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன.அந்த வகையில் இந்தியாவிலும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பயிற்சி அளித்து வருகிறது.

ஒலிம்பிக்கில் போட்டிக்கு சானியா மிர்சா தேர்வு!

2017ல் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா காயம் காரணமாக அதில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது 34 வயதான சானியா மிர்சா மீண்டும் ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கான சிறப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது. குழந்தை பிறப்பிற்கு பின் சானியா மிர்சா 2 ஆண்டுக்கு மேலாக விளையாடாவிட்டாலும், டென்னிஸ் சங்கத்தின் சிறப்பு திட்டத்தின் கீழ் அவரது தரவரிசை அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like