1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு! முதல்வர் அதிரடி!!

மருத்துவப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு! முதல்வர் அதிரடி!!


கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன்,  அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளாகப் போற்றப்பட்டு,  அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார். தன்னலம் கருதாமல் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதித்து உயிரிழக்கும் அனைத்து அரசு மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு அவர்கள் ஓய்வு பெறும் காலம் வரை முழு ஊதியம் வழங்கப்படும் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

newstm.in

Trending News

Latest News

You May Like