1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.1.22 கோடி அபராதம்.. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது.. ஊரடங்கில் நடவடிக்கை..!

ஒரே நாளில் ரூ.1.22 கோடி அபராதம்.. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது.. ஊரடங்கில் நடவடிக்கை..!


இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள்   வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,85,150 கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் ரூ.1.22 கோடி அபராதம்.. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது.. ஊரடங்கில் நடவடிக்கை..!

மேலும், ஊரடங்கை மீறியதாக 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை. 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ.2.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10   நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் ரூ.1.22 கோடி அபராதம்.. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது.. ஊரடங்கில் நடவடிக்கை..!

கடந்த 24ஆம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி   உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. 

வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

newstm.in 


 

Trending News

Latest News

You May Like