ஓட்டலில் உல்லாசம் !! ஜோடிக்கு நூதன தண்டனை.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய சூழலிலும் மாகாண தலைநகர் பண்டா ஏஸில் நேற்று முன்தினம் இரவு, பகுதி நேர ஊரடங்கை மீறி திருமணம் ஆகாத ஒரு ஜோடி ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து உள்ளது.
இதை துப்பறிந்த மாகாண போலீசார் அவர்களை பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தலா 40 முறை பிரம்பு அடி கொடுத்து தண்டனையை நிறைவேற்றினர். இதேபோல் மது அருந்திய 4 பேருக்கும் தலா 40 தடவை பிரம்பு படி கிடைத்தது.
பொதுவாக இது போல் வழங்கப்படும் தண்டனைகளை நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கம். ஆனால், பகுதி நேர ஊரடங்கு காரணமாக 10, 15 பேர் மட்டுமே இதை காண்பதற்கு வந்திருந்தனர். இவர்களும் கூட முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி, தள்ளி தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தனர்.
Newstm.in