1. Home
  2. தமிழ்நாடு

நீதிமன்றம் அழைத்துச் சென்ற போது போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய கைதி!

நீதிமன்றம் அழைத்துச் சென்ற போது போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய கைதி!


திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி காவல் நீட்டிப்புக்காக சீர்காழி நீதிமன்றம் அழைத்து வந்த போது போலீசார் பிடியிலிருந்து தப்பிசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக காரைக்கால் மேலகாசாகுடியை சேர்ந்த தீபக் ஜங்லின்( 27) என்பவர் கைது செய்யப்பட்டார்.

நாகை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் காவல் நீட்டிப்புக்காக சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்திற்குள் செல்லும்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி அவர், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனால் சீர்காழி நீதிமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தப்பியோடிய தீபக் ஜங்லினை சீர்காழி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like