சபைக்கு வரும் இளம்பெண்களிடம் ஆபாச பேச்சு.. மத போதகர் சிறையில் அடைப்பு !!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேணு முடியகம்பை கிராம பகுதியில் கிறிஸ்துவ மத போதகராக இருப்பவர் அசோக் ஸ்டீபன். இவர் தனது சபைக்கு வரும் இளம் பெண்களிடம் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர் இளம்பெண்களை செல்போனில் தொடர்புகொள்ளும் மத போதகர், அவர்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
இதனால் பெண்கள் பலரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆனால் செல்போனில் ஆபாச பேச்சு நாளுக்கு நாள் வளர்ந்ததால் பெண்கள் சிலர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அசோக் ஸ்டீபனை பிடித்து விசாரணை நடத்தினர். அசோக் ஸ்டீபன் இளம்பெண்களிடம் ஆபாசமாக பேசியதும், பலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அசோக் ஸ்டீபனை கோத்தகிரி போலீசார் கைது செய்து குன்னூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
newstm.in