1. Home
  2. தமிழ்நாடு

மகன் கண்முன்னே பிரபல டிவி நடிகை தற்கொலை.. மகன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் !

மகன் கண்முன்னே பிரபல டிவி நடிகை தற்கொலை.. மகன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் !


4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை திரும்ப வராததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

கலிபோர்னியாவில் பிரபல டிவி நட்சத்திரம் நயா ரிவேரா. இவர் நேற்று தனது 4 வயது மகன் ஜோசி டோர்சின் யுட் உடன் அங்குள்ள ஏரியில் படகு சவாரி சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அளித்த தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

அப்போது ஏரியில் படகில் சிறுவன் மட்டும் இருந்த நிலையில், சிறிது நேரத்தில் நடிகையின் மகன் கண்டுபிடிக்கப்பட்டார். சிறுவன்  தனது அம்மா "தண்ணீரில் குதித்தார், ஆனால் மீண்டும் மேலே வரவில்லை" என்று போலீசாரிடம் கூறினார்.

ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானம் மற்றும் டைவ் குழுக்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை நடைபெற்ற விடிய விடிய நடந்த தேடுதலில் ஒருதகவலும் கிடைக்கவில்லை.  

அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டிவி நடிகை தற்கொலை செய்துக்கொண்டதாக அங்கு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in 

Trending News

Latest News

You May Like