கொரோனா பாதிப்பால் பிரபல தனியார் மருத்துவமனை மூடல்!
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோன நோய் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவசரகால சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மருத்துவமனையில் அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அதன் ஹெல்த் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனை முழுவதுமாக கிருமி நாசினிகள் தெளித்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
newstm.in