அமராவதி அணையில் இருந்து நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
அமராவதி அணையில் இருந்து நாளை மறுநாள் முதல் பாசனத்துக்கு நீர்திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Sep 18, 2019, 17:50 IST
| அமராவதி அணையில் இருந்து நாளை மறுநாள் முதல் பாசனத்துக்கு நீர்திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
8 பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 18.1.2020 வரை 1,944 மில்லி கனஅடிக்கு மிகாமலும், 10 பழைய ராஜவாய்க்கால் பாசன பகுதிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி வரை 3,110 மில்லி கனஅடிக்கும் மிகாமல் நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய பாசன பகுதிகளுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி வரை 1,711 மில்லி கனஅடிக்கு மிகாமலும் நீர்திறக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, நீர்திறப்பால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in