வேலூர் தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்களாக 209 பேர் நியமனம்!
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் மொத்தம் 209 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, திமுக 70க்கும் மேற்பட்டோரை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்துள்ளது. தற்போது அதிமுக, திமுகவை விட இரண்டு மடங்கு கூடுதலாக மொத்தம் 2509 பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
வருகிற 22ம் தேதி காலை 10 மணி முதல் முழுவீச்சில் தேர்தல் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் எம்.எல்.ஏ ரவியின் மேற்பார்வையில் தேர்தல் பொறுப்பாளர்கள் செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in