ராதாபுரம் தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது.
Oct 4, 2019, 17:11 IST
| ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது.
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையில், உயர்நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் ஆணைய அலுவலர்கள் 26 பேர் வாக்குகளை எண்ணுகின்றனர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் பதிவான 1,508 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 19,20,21 சுற்றுகளில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
newstm.in
newstm.in