தமிழகம் வந்ததில் மகிழ்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட்
தமிழகம் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
Oct 11, 2019, 17:24 IST
| தமிழகம் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் ட்விட்டர் பதிவில், ‘கலாசாரம், விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா - சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை வந்திருக்கிறார் பிரதமர். அங்கிருந்து அவர் காரில் கோவளம் செல்கிறார்.
newstm.in