மக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - ஓபிஎஸ்
17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதப் பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறியுள்ளார்.
newstm.in
newstm.in