மநீம, அமமுக பயந்து ஒதுங்கிவிட்டது: அமைச்சர் தங்கமணி
இடைத்தேர்தலை கண்டு மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பயந்து ஒதுங்கி விட்டதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Sep 23, 2019, 00:15 IST
| இடைத்தேர்தலை கண்டு மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பயந்து ஒதுங்கி விட்டதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விக்கிரவாண்டி, நாங்கு நேரி இடைத்தேர்தலில் தலா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தலை கண்டு மநீம, அமமுக பயந்த ஒதுங்கி விட்டதாகவும், அதிமுகவை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் தைரியத்துடன் நின்று வெற்றிபெறும் என கூறினார். விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 40 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Newstm.in
newstm.in