‘உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம்’
உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Oct 4, 2019, 03:40 IST
| உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம்; தவறு செய்ய வாய்ப்பு இருந்தாலும் தவறு செய்யாமல் இருப்பதே நேர்மையாகும். கடன் வாங்குவதில் தவறில்லை; ஆடம்பர செலவுக்கு கடன் வாங்கக் கூடாது. சட்டப்பேரவையில் யார் கேள்வி கேட்டாலும், கேள்வியையே பதிலாக தருபவர் புன்னகை மன்னன் செல்லூர் ராஜூ’ என்று கூறியுள்ளார்.
மேலும், நீட் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
newstm.in
newstm.in