Logo

உயர்நீதிமன்றம் உத்தரவு: அதிமுக கொடிகள் அகற்றம்

விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, கடற்கரை சாலையில் உள்ள அதிமுகவின் கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
 | 

உயர்நீதிமன்றம் உத்தரவு: அதிமுக கொடிகள் அகற்றம்

விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, கடற்கரை சாலையில் உள்ள அதிமுகவின் கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சென்னை பள்ளிக்கரணையில்  நேற்று பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து அதிகமுகவின் கொடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழாவை துவக்கி வைப்பதற்காக முதலமைச்சர் அங்கு வந்திருந்தார். அதற்காக வைக்கப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP